அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு சபாநாயகர் கண்டிப்பு: நையாண்டி செய்யக்கூடாது என அவை முன்னவர் வேண்டுகோள்
கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை சம்பந்தமான கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். அப்போது துணை கேள்வி எழுப்பி அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி(அதிமுக) பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது அவர், ‘‘கேள்வி கேட்பதற்காக கை தூக்கி, கை தூக்கி கையே வலிக்கிறது’’ என்றார்.
உடனே சபாநாயகர் அப்பாவு, ‘‘இல்லை, இப்படி எல்லாம் பேசக்கூடாது. கை சுகமானதற்கு பிறகு நான் கூப்பிடுகிறேன். கை சுகமாகட்டும். உட்காருங்கள்’’ என்று கூறி அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார்.


* பேரவையில் நாளை போலீஸ் மானியம்
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஞாயிறு) விடுமுறையாகும். நாளை (திங்கள்) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காங்கிரஸ், பாமக, பாஜ, விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட். உள்ளிட்ட முன்வரிசை தலைவர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு நாளை மறுதினம் (செவ்வாய்) மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசி, காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கான அறிவிப்புகளை வெளியிடுவார்.


