அதானி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
Advertisement
இதுகுறித்து அதானி மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக்குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். தம்மை மனிதப் புனிதராக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, அதானி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது நெருக்கமானவர்களுக்கு சலுகை வழங்குவதில் மோடி மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். அதானி குழும நிறுவனத்திற்காக இந்தியாவில் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால் அதானி குழுமம் வங்கதேசத்திற்கு பதில், இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement