தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை மறுநாள் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈடி சம்மன்

புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.7500கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் முடக்கினார்கள். இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் மீதான சோதனையின்போது நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ.40கோடி மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. சூரத்தில் இயங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக துபாய்க்கு நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் ரூ.600கோடிக்கும் மேல் சர்வதேச ஹவாலா வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹவாலா வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் குழும உரிமையாளர் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. அனில் அம்பானி ஆஜராக கோரி அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நேற்று அவர் நேரில் ஆஜராக வேண்டிய நிலையில், வீடியோகான்பரன்ஸ் மூலமாக தான் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தருவதாகவும் கூறி அமலாக்கத்துறைக்கு அனில் அம்பானி கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த கடிதத்தை நிராகரித்துவிட்டனர். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது 17ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டிஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Advertisement

Related News