தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை விடுமுறையை முழுமையாக வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Advertisement

ஊட்டி : மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும்.

பல்வேறு குளறுபடிகளை உருவாக்கும் டிஎச்ஆர்., திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். செயலாளர் சசிகலா மற்றும் இணை செயலாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிஐடியு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News