தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் பயங்கரம்; தாய், தம்பி சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை

திருமலை: தாய், தம்பியை சரமாரி குத்தி கொன்ற வாலிபர், போலீசுக்கு போன் செய்து காத்திருந்து கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் நகரில் ரெஸ்ட் ஹவுஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு, பைனான்சியர். இவரது மனைவி மகாலட்சுமி (60). மகன்கள் ஸ்ரீனிவாஸ் (37), ரவிதேஜா (33). மேலும் ஒரு மகள் உள்ளார். மகள் திருமணமாகி பெங்களூரில் கணவருடன் வசிக்கிறார். கொரோனா தொற்று காலத்தில் ஸ்ரீராமுலு இறந்துவிட்டார்.

Advertisement

இந்நிலையில் மகாலட்சுமி குடும்பத்தினர் நடத்தி வந்த பைனான்ஸ் தொழில் பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகளின் வாடகை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் போதிய அளவு வருமானம் இல்லாததால் ஸ்ரீனிவாஸ் மனநோயாளி போல் இருந்துள்ளார். இதனால் அவரை வெளியே எங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லையாம். நேற்று முன்தினம் அதிகாலை, ஸ்ரீனிவாஸ் தனது தாய் மகாலட்சுமி, தம்பி ரவிதேஜாவை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் போலீசாருக்கு போன் செய்து, தனது தாயையும் சகோதரனையும் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ​​ரவிதேஜா, மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அவர்கள் உடலில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. அப்போது மாடியில் இருந்து கத்தியுடன் இறங்கி வந்த ஸ்ரீனிவாஸை ேபாலீசார் கைது செய்தனர்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஸ்ரீனிவாஸ் மனநிலை சரியில்லாத நிலையில், கொலைகளை செய்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முழு விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

18 ஆண்டுகள் துன்புறுத்தல்;

தாய், தம்பியை கொலை செய்த பிறகு ஸ்ரீனிவாஸ் போலீசாரிடம் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘எனது தாய் மகாலட்சுமி மற்றும் சகோதரர் ரவிதேஜாவை நானே கொலை செய்தேன். அவர்கள் இறந்த பிறகும், பேய்களாக மாறி என்னை துன்புறுத்துகின்றனர். நான் என்ன செய்தாலும் என் அம்மாவும் தம்பியும் முன்கூட்டியே தெரிந்து கொள்வார்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல. அவர்கள் பேய்கள். 18 வருடங்களாக என்னை துன்புறுத்தி வந்தார்கள். அதனால்தான் அவர்களை கொன்றேன்’ என பேசியுள்ளார். ஸ்ரீனிவாஸ் கூறியதை வைத்து அவரது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News