தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர முதல்வர் குறித்து அவதூறு; டைரக்டர் ராம்கோபால் வர்மா கைது செய்யப்படுவாரா?: நாளை ஐகோர்ட்டில் விசாரணை

Advertisement

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் குறித்து அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட டைரக்டர் ராம்கோபால் வர்மாவை போலீசார் தேடி வரும் நிலையில், முன்ஜாமீன் கோரிய மனு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டார். இதுதொடர்பாக அனந்தபூர், குண்டூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

மேலும் அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாக இருந்தார். ராம்கோபால் வர்மா தனது வழக்கறிஞர் மூலம் ஆன்லைனில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தெரிவித்தார். முன்ஜாமீன் கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை போலீசார் வெளியிட்டனர். இந்நிலையில் ராம் கோபால் வர்மா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று போலீசார் ராம்கோபால் வர்மாவை தேடினர். அவர் படப்பிடிப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்றதாக அவரது வீட்டில் இருந்த ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Advertisement

Related News