தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாஜி அமைச்சர் மீது இளம்பெண் பலாத்கார புகார்

Advertisement

திருமலை: ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா பக்கிங்காம் பேட்டையை சேர்ந்த பத்மாவதி, குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மெருகு நாகார்ஜூனாவுடன் எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் தனது துறை தொடர்பான ஒப்பந்த பணிகளை தருவதாக கூறியும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் என்னிடம் பெற்றுக் கொண்டார்.

ஆனால் எனக்கு எந்த ஒப்பந்தப் பணியும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த பணிக்காக அவரிடம் செல்லும்போது என்னை 4 முறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது நான் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியவில்லை. பணத்தை தரும்படி கூறினால் தரவில்லை. விசாகப்பட்டினத்தில் இருப்பதாக கூறி வந்தனர்.

தற்போது ‘விசாகப்பட்டினத்தை சேர்ந்த மலைவாழ்மக்கள் நலத்துறை டீச்சர் கங்கா பவானி என்பவரை இதேபோன்று பணம் கேட்டதால் சாகடித்து விட்டோம். அதேபோன்று உன்னையும் கொன்று விடுவோம்’ என்று உதவியாளர் முரளி மோகன் மிரட்டுகிறார். முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண் என்னை காப்பாற்றி எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மாஜி அமைச்சர் மீது பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Advertisement