இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தனா தீப்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓரிரு நாளில் ஈரோடுக்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். வாக்குச்சாவடிகளில் உள்ள பாதுகாப்பு, வாக்களிக்க வரும் மக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது, அமைதியான முறையில் வாக்குபதிவை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement

