தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் முதலீடு செய்தால் 45 நாட்களுக்குள் அனுமதி

*தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

Advertisement

திருமலை : ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள நோவாடெல்லில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா- ஐரோப்பா வணிக கூட்டாண்மை வட்ட மேசைக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:

விசாகப்பட்டினம் ஒரு அற்புதமான கடலோர நகரம். இப்பகுதியில் நல்ல வளங்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு வெளியில், மிகப்பெரிய ஏ.ஐ. தரவு மையத்தை விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் அமைத்து வருகிறது. இப்பகுதியில் இருந்து கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பும் அமைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வந்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. வாழ்க்கைத் தரம் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதற்கேற்ப செல்வம் அதிகரிக்க வேண்டும். இதற்காக, ஆந்திராவில் பல்வேறு வகையான தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமராவதியில் முதல் குவாண்டம் வேலி அமைக்கப்பட உள்ளது. டிரோன்களும் பெரிய அளவில் பயன்படுத்தப்படும். சிவில் பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அதனால்தான் ஆந்திராவில் டிரோன் நகரத்தை அமைத்து அவற்றை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் ஒரு விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்போது பசுமை ஆற்றலின் முக்கியத்துவமும் கணிசமாக அதிகரித்துள்ளது.ஆந்திராவில் பெரிய அளவிலான துறைமுகங்களை கட்டி வருகிறோம். பசுமை எரிசக்தி துறையில் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதில் 160 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம். வணிகம் செய்வதற்கான வேகக் கொள்கையை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறோம். எனவே ஆந்திராவில் முதலீடு செய்யுங்கள், அனுமதிகளில் எந்த தாமதமும் இருக்காது, 45 நாட்களுக்குள் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்திக்கு வேகமாக ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் ேபசினார்.

Advertisement

Related News