தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் காற்றால் உதிர்ந்து விழுந்தது வேலூர் மண்டிக்கு மாங்காய் வரத்து அதிகரிப்பு

Advertisement

*விலை சரிந்து கிலோ ரூ.10க்கு விற்பனை

வேலூர் : வேலூர் மாங்காய் மண்டிக்கு ஆந்திராவில் இருந்து காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது.

வேலூர் மாங்காய் மண்டிகளை பொறுத்தவரை உள்ளூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, அனந்தப்பூர், திருப்பதி மாவட்டங்களில் இருந்தும் மாங்காய் வரத்து உள்ளது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் மழை போதுமான அளவில் இல்லாததால் மாங்காய் பூக்கள் பெருமளவில் உதிர்ந்ததால் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக வேலூர் மாங்காய் மண்டிகளுக்கு வர வேண்டிய மாங்காய் வரத்து இந்த சீசனில் குறைந்து போனது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலத்தின் அதிகளவிலான வெயில் பதிவாகி வருகிறது. அதற்கேற்ப வறட்சியின் கோரமுகம் தென்மாநிலங்களை பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் கோடை மழையை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், மழைக்கு பதில் சூறைக்காற்றும், லேசான தூறலுடன் மழையின் போக்கு ஏற்கனவே விளைச்சல் பாதிப்பு அச்சத்தில் இருந்த விவசாயிகளை மேலும் வேதனையில் தள்ளியுள்ளது.

பலத்த சூறைக்காற்று தமிழகத்தின் வடமாவட்டங்களை மட்டுமின்றி ஆந்திராவின் தென்மாவட்டங்களையும் கடந்த 4 நாட்களாக சுழற்றி அடித்ததால் மாமரங்களில் இருந்த மாம்பிஞ்சுகள், முற்றாத காய்கள் அனைத்தையும் மண்ணில் உதிர்த்துள்ளது. தற்போது இவைதான் சரக்கு லாரிகள் மூலம் வேலூர் மாங்காய் மண்டிகளுக்கு வந்து குவிந்துள்ளன. இதனால் கடந்த சில நாட்கள் வரை கிலோ ₹100க்கு மேல் விற்பனையான பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரா வகை காய்களும், பழங்களும் தற்போது விலை சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக உதிர்ந்த மாங்காய், மாம்பிஞ்சுகள் கிலோ ₹10க்கு நேற்று விற்பனையானது.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘வழக்கமாக 4 லாரிகளுக்கு மேல், அதாவது 8 முதல் 10 டன்கள் வரை மாங்காய் வரத்து இருக்கும். இந்த ஆண்டு அது ஒன்று அல்லது இரண்டாக குறைந்தது. கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருவதால் மரங்களில் மிச்சம் மீதியிருந்த பிஞ்சுகளும், காய்களும் உதிர்ந்துபோயின. இன்று அவைதான் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும், உள்ளூர் பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்துள்ளது’ என்றனர்.

Advertisement

Related News