அமோனியா வாயு கசிவு வழக்கு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. வாயு கசிவு சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் அளித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்தபின் விரிவான உத்தரவு பிறப்பிக்கபடும் என்று உயர்நீதிமன்றம் நீதிபதி குமரப்பன் தெரிவித்துள்ளார்.
