தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் தேசிய நலனை காட்டி கொடுத்த ஆர்எஸ்எஸ்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துடன் ஆர்எஸ்எஸ் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் தேசிய நலனை அது காட்டி கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது, ஆர்எஸ்எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல,அதனால் வரிகள் எதுவும் செலுத்துவதில்லை என்று தெரிவித்தார்.

Advertisement

தற்போது அமெரிக்க நாட்டில் தனது நலன்களை பாதுகாப்பதற்காக சர்வதேச சட்ட நிறுவனமான ஸ்கொயர் பேட்டன். போக்ஸ் நிறுவனத்துடன் ஆர்எஸ்எஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக கணிசமான தொகையை செலவிட்டுள்ளது. இதே ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பரப்புரை குழுவில் ஒன்றாகும். கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை பரப்புரை நிறுவனத்திற்கு ஆர்எஸ்எஸ் 3.30 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் அதிகாரிகளிடம் பரப்புரை செய்வதற்காக ஸ்கொயர் பேட்டன் போக்ஸை தனது பரப்புரை நிறுவனமாக ஆர்எஸ்எஸ் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் பரப்புரை நிறுவனத்துடன் ஆர்எஸ்எஸ் தொடர்பு வைத்துள்ளது என்று வெளியான செய்தியின் மூலம் ஆர்எஸ்எஸ் தேசிய நலனை காட்டி கொடுத்துள்ளது. அது ஒரு போலி தேசியவாத அமைப்பாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News