Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்பை குறைக்க 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா திட்டம்

புதுடெல்லி: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவின் கடுமையான வரிகளை தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள 50 நாடுகளை குறிவைப்பது உட்பட இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு அதிகாரி,‘‘ இந்த 50 நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளன. ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மை உள்ளிட்ட நான்கு விஷயங்களில் வர்த்தக அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே 20 நாடுகளில் கவனம் செலுத்தி வந்தது. இப்போது மேலும் 30 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்றார். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 35.14 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் வர்த்தக பற்றாக்குறை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 18.78 பில்லியன் டாலர்களாக குறைந்தது.2025-26 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில், ஏற்றுமதி 1.92 சதவீதம் அதிகரித்து 112.17 பில்லியன் டாலர்களாகவும்,இறக்குமதி 4.24 சதவீதம் அதிகரித்து 179.44 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது.