தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் புதிய மசோதா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: கவலை தெரிவித்த இந்தியா

Advertisement

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ஒப்புக் கொள்ளாத காரணத்தால் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தண்டிக்க அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மசோதா கொண்டு வந்துள்ளார். தற்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த மசோதா மூலம் இந்திய வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கிடையே, 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜெய்சங்கர், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகமும், அதிகாரிகளும் செனட்டர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளனர். எரிசக்தி பாதுகாப்பில் எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் எந்தவொரு முன்னேற்றமும் இந்தியாவின் நலனை பாதிக்கும் எனில் உரிய சமயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் ’’ என்றார்.

Advertisement

Related News