தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் 2 லட்சம் பேர் முன்பதிவு: 533 வங்கி கிளைகளில் ஏற்பாடு

Advertisement

அமர்நாத்: அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக 533 வங்கிக் கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலையின் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்வார்கள். இந்த குகையில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கம், சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுகிறது.

இந்தாண்டு அமர்நாத் யாத்திரை குறித்த முக்கிய தகவல்கள், முன்பதிவு நிலவரங்கள் வெளியாகி உள்ளது. அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, வெறும் ஐந்து நாட்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளனர். வரும் ஜூலை 3 முதல் தொடங்கவுள்ள இந்த யாத்திரையானது வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த யாத்திரை மொத்தம் 47 நாட்கள் நடைபெறும். நாடு முழுவதும் 533 வங்கிக் கிளைகளில் யாத்ரீகர்களுக்கான முன்பதிவு செயல்முறை நடைபெற்று வருகிறது. அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான JKSASB.nic.in-ல் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2024ல், யாத்திரையின் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்; மொத்தம் 3.5 லட்சம் பேர் பதிவு செய்தனர்.

கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்பு குழுக்கள் பயிற்சி பெற்று வருகின்றன. முக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு, அவசரநிலைகளுக்கு தயாராக உள்ளனர். பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள், தங்குமிடங்கள், மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Related News