தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமராவதி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம் வாயை திறந்து காட்டியதால் பொதுமக்கள் ஓட்டம்

Advertisement

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது அமராவதி ஆறு. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட மழை நீர் வெள்ளத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட முதலைகள் தப்பி வந்து அமராவதி ஆற்றின் நீர்வழி பாதையில் பல்வேறு இடங்களில் தங்கிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே இம்முதலைகளால் ஏற்பட்ட இனப்பெருக்கத்தில் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் அமராவதி ஆற்றில் இருந்து கரூர் மாவட்டம் வரை பல்வேறு இடங்களில் முதலைகள் இனப்பெருக்கம் பெருகி இவற்றில் ஐந்துக்கு மேற்பட்ட முதலைகளை தாராபுரம் அமராவதி ஆறு சீதக்காடு, சங்கரண்டாம் பாளையம், மணலூர் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. இதை தொடர்ந்து முதலைகளை அமராவதி வனத்துறையினர் பிடித்து சென்றனர். ஆனால் அவ்வப்போது அமராவதி ஆற்றில் திடீர் திடீரென தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டி பொதுமக்களை முதலைகள் அச்சுறுத்தி வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை அமராவதி சீத்தக்காடு தடுப்பணை பகுதியில் சுமார் 70 கிலோ எடை கொண்ட 6 அடி நீளம் உள்ள் முதலை திடீரென தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டி வாயை பிளந்த நிலையில் அச்சுறுத்தியதை பார்த்த அப்பகுதியில் குளிப்பதற்காக சென்ற பொதுமக்களும் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் அலறியடித்து ஓடினர். இந்நிலையில், இந்த முதலைகளை வனத்துறையினர் முற்றிலுமாக பிடித்து சென்று அமராவதி முதலை பண்ணையில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News