தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

Advertisement

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர் நிவின் பாலி. மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், நேரம், தட்டத்தின் மறையத்து, 1983, ஓம் சாந்தி ஓசானா, பிரேமம் உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நேரம் ரிச்சி உள்பட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் நிவின் பாலி, மலையாள சினிமா தயாரிப்பாளர் சுனில் உள்பட 6 பேர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் 3 நாள் பூட்டி வைத்து மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் அருகே நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் கொச்சி ஊன்னுகல் போலீசில் புகார் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகாரை நடிகர் நிவின் பாலி மறுத்தார். பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் கேரளாவில் ஒரு சினிமா படப்பிடிப்பில் நிவின் பாலி இருந்ததாக அந்த படத்தின் டைரக்டரான வினீத் னிவாசன் கூறினார். இதற்கிடையே தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் சதித்திட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி கேரள முதல்வர், டிஜிபிக்கு நிவின் பாலி புகார் கொடுத்தார். இதற்கிடையே நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் இன்று கொச்சியில் விசாரணை நடத்தியது. அப்போது, துபாயில் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் தான் கேரளாவில் இருந்ததற்கான ஆவணங்களை போலீசிடம் தாக்கல் செய்தார்.

 

Advertisement

Related News