தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் ஒன்றிய அரசால் தேர்வானவர்கள் மனசாட்சிபடி முடிவெடுக்கட்டும்: காங். கருத்து

Advertisement

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அவர்கள் குழுவில் பங்களிப்பது குறித்து மனசாட்சிபடி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்து கட்சியை சேர்ந்த 7 பிரதிநிதிகள் குழுவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதில், ஆனந்த் சர்மா, கவுரவ் கோகோய், சையத் நசீர் உசேன் மற்றும் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகிய 4 பேர் காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், ஆனந்த் சர்மா தவிர சசிதரூர், மணிஷ் திவாரி, அமர்சிங், சல்மான் குர்ஷித் ஆகியோர் குழுவில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தாங்கள் பரிந்துரைத்தவர்களை புறக்கணித்துவிட்டு பரிந்துரைக்காதவர்களை தேர்ந்தெடுத்து பாஜ அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசை பொறுத்த வரை தேச நலன் மிக முக்கியமானது. இனியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை. இதை அரசியலாக்குவதும் பொருத்தமானதில்லை. காங்கிரஸ் யாரையும் தடுக்கவில்லை. பிரதிநிதிகள் குழுவில் உள்ள எங்கள் அனைத்து எம்பிக்களும் பங்களிப்பை வழங்குவார்கள். இந்த விஷயத்தில் அவர்கள், அவரவர் மனசாட்சிப்படி முடிவெடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.

Advertisement

Related News