தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடும் நீங்கள், எல்லா மாநிலங்களையும் ஒன்றாக கருத வேண்டும்: நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேச்சு

சென்னை: இந்திய விடுதலைக்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூலித்தேவன் என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேசிவருகிறார். ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், அனால் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்த்த குயிலியை தெரியாது. தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளது. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார் பெயர் எதற்காவது சுட்டப்பட்டுள்ளதா? என வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதத்தின் போது திருச்சி சிவா கேள்வியெழுப்பினார்.

Advertisement

வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக எம்.பி. பேசினார்.

அப்போது: மாநிலக் கட்சியான திமுக எந்த நிலையிலும் நாட்டுக்காக போராடியவர்களை கைவிட்டதில்லை. வரிகொடா இயக்கத்திற்கு முன்பே வரி கொடுக்க மறுத்த கட்டபொம்மனை வட மாநிலங்களுக்கு தெரியுமா..? இந்திய விடுதலைக்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூலித்தேவன். ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், ஆனால் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்த்த குயிலியை தெரியாது. ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், ஆனால் வேலு நாச்சியாரைப் பற்றி தெரியாது.

தேசிய கீதத்துக்கும் வந்தே மாதரத்துக்கும் சம அந்தஸ்து உண்டு என அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளது. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார் பெயர் எதற்காவது சூட்டப்பட்டுள்ளதா? ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முதலில் மொழிந்தவர், நேதாஜிக்கு முன்னவர் செண்பகராமன் பற்றி ஏன் யாருக்கும் தெரியவில்லை? சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பலில் தான் நான் இந்தியா செல்ல வேண்டும் என்று கூறியவர் செண்பகராமன்.

பத்மாசினி போராட்டம் பற்றி இங்கே யாருக்குத் தெரியும்; ஒன்றிய அமைச்சர் முருகனுக்கு தெரியுமா? வடமாநிலங்களில் யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் தெரியுமா? 1945ல் நாடு முழுவதும் எழுந்த வெள்ளையனே வெளியேறு முழக்கத்துக்கு முன்னோடியாக அம்முழக்கத்தை எழுப்பியவர் பூலித்தேவன்.

வந்தே மாதரம் பற்றி பேச வேண்டிய ஆளும்கட்சியினர் காங்கிரஸ் மீதும், நேரு மீதும்தான் விமர்சனம் வைக்கின்றனர். எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடும் நீங்கள், எல்லா மாநிலங்களையும் ஒன்றாக கருத வேண்டும். ஜெய்ஹிந்த் செண்பகராமனின் பெயரை அடுத்த போர்க்கப்பலுக்கு சூட்டுங்கள், பாராட்டுகிறோம் என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேசினார்.

Advertisement

Related News