தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலம்.. தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் SIR சதி வேலை இனி எடுபடாது : அகிலேஷ் யாதவ்

பாட்னா : பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலமாகிவிட்டது என்று தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரம் குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 203 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில் 91 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. 80 தொகுதிகளில் முன்னிலை பெற்று நிதிஷ் குமாரின் JDU 2வது இடத்தில் உள்ளது. இண்டியா கூட்டணி 34 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னிலைக்கு தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைமுறையை(SIR) குற்றம் சாட்டியுள்ள அகிலேஷ், இது "தேர்தல் சூழ்ச்சி" என கூறியுள்ளார். "SIR-ன் விளையாட்டு பீகாரில் ஆடப்பட்டுள்ளது, ஆனால் இது தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரபிரதேசத்தில் சாத்தியமில்லை. ஏனென்றால் தேர்தல் சதி இப்போது வெளிப்பட்டு விட்டது" என்று கூறியுள்ளார்."இனி இவர்களை இந்த விளையாட்டை ஆட விடமாட்டோம்" என கூறியுள்ள அகிலேஷ், சிசிடிவியைப் போன்று விழிப்பாக இருந்து பாஜகவின் திட்டங்களை முறியடிப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement