தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணி ஆட்சி நடந்தாலும் 2 மாநகராட்சியில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் அஜித் பவார் கட்சி: ‘நட்பு யுத்தம்’ நடத்துவதாக திடீர் அறிவிப்பு

 

Advertisement

புனே: புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி தேர்தல்களில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும், தேசியவாத காங்கிரசும் தனித்தனியே போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16ம் தேதியும் நடைபெறவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, தேசியவாத காங்கிரசின் கோட்டையாகக் கருதப்பட்ட பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில், புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மட்டும் பாஜகவும், துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் தனித்தனியே களம் காணும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முடிவு செய்துள்ளார்.

இதனை நேற்று உறுதிப்படுத்திய துணை முதல்வர் அஜித் பவார், ‘மகாராஷ்டிர பாஜகவின் மூத்த தலைவராக விளங்கும் பட்னாவிஸ் எடுக்கும் முடிவு இறுதியானது; அதை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம். மாநிலத்தின் மற்ற 29 மாநகராட்சிகளில் கூட்டணி தொடரும் நிலையில், புனே பிராந்தியத்தில் மட்டும் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைக்காமல், நட்பு ரீதியிலான போட்டியில் ஈடுபடுவோம்’ என்று அவர் கூறினார். மேற்கண்ட இரு மாநகராட்சிகளிலும், பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே அசைக்க முடியாத சக்திகளாகத் திகழ்வதால், வரும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News