தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானங்களை நோக்கி லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..!!

Advertisement

மதுரை: விமானங்களை நோக்கி கண் கூச செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கு நேரடியான விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓடுதளம் அருகே விமானம் இறங்கும் போதும், மேலேழும்பும் போதும் லேசர் ஒளி, ஃபிளாஷ் லைட் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் அடைப்படையில் விமானங்களை நோக்கி லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்துக்கு வெளியே தெற்கு சுவர் அருகிலும், பரம்புப்பட்டிக்கு அருகிலும் சிலர் வேடிக்கை பார்க்க நிற்கின்றனர். பொதுமக்கள் சிலரின் செயல்களால் விமானிகள் விமானங்களை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க (0452-2671168, 0452-2342496) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisement