தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் அருகே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய அதிமுக நிர்வாகிகள் கைது: ரூ.3 லட்சம், 3 சொகுசு கார் பறிமுதல்

ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் ஒரத்தநாடு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 6 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் (64), தென்னமநாடு அதிமுக இளைஞரணி வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ்(53) மற்றும் ஒரத்தநாடு புதூர் சசிகுமார் (48), திருமங்கலக்கோட்டை மேலையூரை சேர்ந்த வேலாயுதம் (60), துலுக்கன் பட்டி சேகர் (56), கண்ணந்தன்குடி மேலையூர் விவேகானந்தன் (51) என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் ரொக்கம், 3 விலை உயர்ந்த சொகுசு கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இனியவன், கைதான 6 பேரும் ஒரு மாதம் தினமும் காலையில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீனில் விடுவித்தார்.

Advertisement

Advertisement