தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுகிலும், நெஞ்சிலும் அதிமுகவுல குத்துறாங்க... மாஜி அமைச்சர் ஒப்பாரி

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது: நமக்கான களம் தயாராகி விட்டது, அனைவரும் தேர்தல் களத்திற்கு தயாராகுங்கள். அதிமுகவை, அதன் தலைமையை காயப்படுத்த வேண்டாம்.

Advertisement

இதை நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அதிமுகவும் காப்பாற்றப்பட வேண்டும். அதன் தலைமையும் காப்பாற்றப்பட வேண்டும். இன்று இந்த இயக்கம் சிறப்பாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இங்கு முதுகில் குத்துபவர்களும் உண்டு, நெஞ்சில் குத்துபவர்களும் உண்டு. நம்முடன் தோளில் கையை போட்டுக் கொண்டு அதிமுகவை எப்படி நசுக்க வேண்டுமென எண்ணுபவர்களும் உண்டு.

அவர்களை எல்லாம் பார்த்துத்தான் பொதுச்செயலாளர் நிதானத்தை கடைபிடித்து கொண்டிருக்கின்றார். தலைவராலும், இந்த இயக்கத்தாலும்தான் நமக்கு முகவரி கிடைத்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நம்மால் அதிமுக இல்லை, அதிமுகவால்தான் நாம் என்ற உணர்வோடு செயல்பட்டு, எந்த மாறுபட்ட கருத்துக்கும் இடமளிக்காமல், காழ்ப்புணர்ச்சி அரசியல் இல்லாமல் செயலாற்றுவோம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement