தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏஐ தொழில்நுட்பத்தால் தனித்துவமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Advertisement

சென்னை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ரேண்டம் வாக்ஸ் இணைந்து இதழியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக வருங்கால ஊடகம் குறித்தான கருத்தரங்கை நேற்று நடத்தியது. இதில் தமிழில் பெரிய மொழி மாதிரிகள் (எல்எல்எம்) மற்றும் சவால்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலப் பாதை தொடர்பான முதல் கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பல்வேறு ஏஐ சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவில் நாம் தற்போது ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டிய தேவை உள்ளது. ஊடகத்துறையில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, நிறைய முக்கிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. சினிமா துறையில் அதனை மார்க்கெட் செய்யவும், படைப்புகளை உலகம் முழுவதும் பரவலாக்குவதிலும் அதிக பங்கு வகித்துள்ளது.

மருத்துவத்துறையிலும் ஏஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது நோய்களை கண்டறிந்து, சிறப்பான சிகிச்சை வழங்க உதவுகிறது. ஆனால் மருத்துவர்கள் தான் எப்போதும் சிகிச்சை அளிக்க முடியும். ஏஐயால் அனைத்து துறைகளிலும் தனித்துவமான வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. இந்த தொழில்நுட்பங்களை அரசுகளால் மட்டுமே வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. பெரு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் பங்கேற்பு மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News