தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை

Advertisement

சென்னை: முன் பகை காரணமாக வாலிபரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (24). ராயப்பேட்டையில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2020 டிசம்பர் 14ம் தேதி இரவு 8.30 மணிக்கு அன்பு தனது நண்பர் மணிகண்டனுடன் மணலி சாலை அருகே சாப்பாடு வாங்க சென்றனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோர் அன்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவர்கள் வைத்திருந்த இரும்பு பிளேட்டால் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அன்புவுக்கும் கொருக்குபேட்டையை சேர்ந்த ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோருக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதிராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஹரி, சரவணன், விக்னேஷ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.7500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Related News