அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
11:47 AM Oct 24, 2024 IST
Share
Advertisement
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.