தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரத்தில் நடிகைகளுக்கும் பங்கு: நடிகை ஷகீலா பகீர்

Advertisement

சென்னை: ஹேமா கமிட்டி விவகாரம், தென்னிந்திய சினிமாவில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ் நடிகைகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து நடிகை ஷகீலா கூறியிருப்பதாவது: மலையாள திரையுலகில் இருப்பது போல தமிழிலும் இந்த பிரச்னை உள்ளது. குறிப்பாக தெலுங்கில் இதைவிட அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்தியை பொறுத்தவரை, அப்படி அல்ல. அவர்கள் எடுத்த உடனேயே நண்பர்களாக மாறிவிடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்னை இருக்காது.

ஆனால் அங்கு நெப்போடிஸம் பிரச்னை உள்ளது. அதாவது புதிய நடிகர்களை யாரையும் வளர விடாமல், தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக முயற்சிப்பது போன்ற பிரச்னை உள்ளது. தென்னிந்திய சினிமாவில் எல்லாம் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்னைகள் உள்ளது. இவை அனைத்தும் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு தான் செய்யப்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும், தனக்கும் அட்ெஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் இயக்குனர்கள் பேசி விடுவார்கள்.

இதற்கு ஒப்புக்கொண்டு தான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். அதனால் நடிகைக்கும் இதில் பங்கு இருக்கிறது. முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்றமுடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக தான் பல பிரச்னைகள் வருகிறது. மேலும் சிலர் வாய்ப்பு தருவதாக சொல்லி, நடிகையை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைப்பர். நடிகையும் போவார். ஆனால் வாய்ப்பு தர மாட்டார். அப்போதுதான் இந்த விவகாரம் வெளியே வரும். இவ்வாறு ஷகீலா கூறினார்.

Advertisement

Related News