தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகை ஹனிரோசுக்கு எதிரான ஆபாச புகாரில் கைதானவர் ஜாமீன் கிடைத்தும் வெளியே வர மறுப்பு: பாபி செம்மண்ணூருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Advertisement

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை ஹனிரோசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைதான கேரளாவை சேர்ந்த நகைக்கடை அதிபரான பாபி செம்மண்ணூருக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் நேற்று தான் வெளியே வந்தார். சிறை வாசலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க முடியாமல் கைதான பலர் என்னுடன் சிறையில் இருந்தனர். ஜாமீன் கிடைத்தும் பணம் கட்ட முடியாததால் அவர்களால் வெளியே வர முடியாமல் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவுவதற்காகத் தான் மேலும் ஒரு நாள் நான் சிறையில் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து போபி செம்மண்ணூர் மீது கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் கூறியதாவது: சிறையிலிருந்து அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரட்டும். அதைப் பற்றி நீதிமன்றத்திற்கு கவலை இல்லை. ஆனால் கைதிகளுக்கு உதவுவதற்காகத் தான் சிறையில் இருந்தேன் என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் ஒரு வியாபாரி, வியாபாரத்தை அவர் கவனித்துக் கொள்ளட்டும். கைதிகளின் நலனை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். அவர் விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் முதற்கட்ட விசாரணையில் அவர் குற்றம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தேவைப்பட்டால் அவரது ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க முடியும். அவர் செய்த செயலுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் கூறினார். இதை தொடர்ந்து அவரது சார்பில் உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.

Advertisement

Related News