தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகை பலாத்கார வழக்கு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கவுரவம் உண்டு: இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து

Advertisement

திருவனந்தபுரம்: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி மலையாள நடிகை தொடர்ந்த வழக்கில் பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான பாலச்சந்திர மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கண்ணியமும், கவுரமும் உண்டு என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். மலையாள சினிமாவில் 1980, 90 காலகட்டத்தில் முன்னணி கதாசிரியர், டைரக்டர், நடிகராக இருந்தவர் பாலச்சந்திர மேனன். இவர் மலையாள சினிமாவின் பாக்யராஜ் என அறியப்பட்டவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் எர்ணாகுளம் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகை பாலசந்திர மேனன் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

கடந்த 2007ல் ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ஓட்டலுக்கு வரவழைத்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பாலச்சந்திர மேனன் மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.கடந்த மாதம் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலச்சந்திர மேனனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, 17 வருடங்களுக்கு முன்பு சம்பவம் நடந்ததாக கூறி புகார் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மீது புகார் கொடுக்கப் போவதாக நடிகையின் வக்கீல் போனில் மிரட்டியதாகவும் பாலச்சந்திர மேனன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கண்ணியமும், கவுரவமும் உண்டு என்று கூறி பாலச்சந்திர மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement