தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங். எம்எல்ஏ தப்பிச்செல்ல உதவினாரா? பிரபல நடிகையிடம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்து கருச்சிதைவுக்கு கட்டாயப்படுத்தியதாக கூறி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கேரள முதல்வரிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக திருவனந்தபுரம் வலியமலை போலீசார் ராகுல் மாங்கூட்டத்தில் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 7 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisement

இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் தனக்கு நெருக்கமான ஒரு நடிகையின் சிவப்பு நிற காரில் தப்பிச் சென்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள அந்த நடிகையை போலீசார் போனில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ராகுல் மாங்கூட்டத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பது உண்மைதான் என்றும், ஆனால் அவர் தப்பிச்செல்ல தான் உதவவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீது திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

Advertisement