தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகர் நாகார்ஜுனா குடும்பம் பற்றி அவதூறு; ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கால் மன்னிப்பு கேட்ட அமைச்சர்: தெலங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீண்டும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே.டி.ராமராவை விமர்சித்துப் பேசிய மாநில அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகியோரின் விவாகரத்து குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.

Advertisement

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான ‘என்-கன்வென்ஷன் சென்டர்’ தொடர்பான மறைமுக ஒப்பந்தத்திற்கு சமந்தாவை இணங்க வைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதே விவாகரத்துக்குக் காரணம் என அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொண்டா சுரேகாவின் கருத்துகளுக்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன் நாக சைதன்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், சட்டரீதியான அழுத்தம் தொடர்ந்ததால், அமைச்சர் கொண்டா சுரேகா மீண்டும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நாகார்ஜுனா குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனது கருத்துகளால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்து, எனது வார்த்தைகளை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். எனினும், இந்த மன்னிப்பில் அவர் நடிகை சமந்தாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ளும் முயற்சியாக இந்த மன்னிப்பு பார்க்கப்படும் நிலையில், இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement