தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச திரைப்பட விழா விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார்

பனாஜி: கோவாவில் சமீபத்தில் 56வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா’ படப் புகழ் ரிஷப் ஷெட்டியுடன் மேடையில் உரையாடினார். அப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் பாராட்டிப் பேசிய ரன்வீர் சிங், அதில் வரும் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று வர்ணித்ததுடன், அந்த தெய்வத்தைப் போல முகபாவனைகளைச் செய்து கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. துளு மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் சாமுண்டி தெய்வத்தை அவர் இவ்வாறு சித்தரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி ரன்வீர் சிங் மீது இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் பனாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

அந்த புகாரில், ‘புனிதமான தெய்வத்தை பேய் என்று கூறியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை ரன்வீர் சிங் காயப்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்கத் திரைப்பட விழாவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் ரன்வீர் சிங்கிற்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Advertisement