தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்து காரணமாக கனரக வாகனங்களை 100 நாள் சிறை பிடிக்கும் உத்தரவு ரத்து: முதல்வருக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி

Advertisement

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: விபத்து ஏற்படுத்திய கனரக வாகனங்களை 100 நாட்கள் வரை சிறைபிடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவை தொடர்ந்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கடந்த 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பொருளாதார, சேவை பாதிப்புகளை மதித்து தமிழக முதல்வர் சென்னை காவல் ஆணையரகம் மூலமாக வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்து வாகனங்களை விடுவித்ததற்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருந்தொகை முதலீடுகளுடன் இயங்கும் ஆம்னி பேருந்துகள், நிதிநெருக்கடியில் தள்ளப்படாமல், வழக்கமான பயண சேவையை தொடரும் வகையில் முதல்வர் எடுத்த இந்த தீர்மானம், தமிழ்நாட்டின் சாதாரண பயணிகளுக்கும், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பலர் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பாக அமைகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News