ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது; ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே: சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு
இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை. எனினும் சுமார் 19 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒன்றிய இரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே . ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.