
படகில் இருந்த மீனவர்கள் அண்ணாமலை (55), கல்யாணராமன் (45), செய்யது இப்ராஹிம் (35), முனீஸ்வரன் (39), செல்வம் (29), காந்திவேல் (69), பாலமுருகன் (25), படகு உரிமையாளர் ஜேசு (39) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் படகுடன் 8 மீனவர்களையும் மேல் நடவடிக்கைக்காக மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தடைகாலத்துக்குப் பிறகு மீண்டும் தொழிலைத் துவக்கியுள்ள நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

