தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்

Advertisement

புழல்: 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வதாக ஒரு பெண்ணை கோயிலில் மணமுடிக்கவிருந்த கல்யாண மன்னனை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (37). இவர் ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி கலைச்செல்வி. 2வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இதன்பிறகு தனது 2 மனைவிகளுக்கு தெரியாமல் 3வதாக பாடியநல்லூர் ஜோதி நகர் 12வது தெருவை சேர்ந்த அம்சவல்லி (36) என்பவரை மணமுடித்து குடும்பம் நடத்திவந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் 3 மனைவிகளுக்கு தெரியாமல் சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த கவி என்பவரை 4வது திருமணம் செய்வதற்காக நேற்று காலை பாடியநல்லூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். இதனிடையே 3வது மனைவி அம்சவல்லிக்கு 4வது திருமணம் செய்வதற்காக வந்திருந்த கவி ரகசியமாக தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அம்சவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக கோயிலுக்கு விரைந்து வந்து லட்சுமணனின் 4வது திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் வந்து 4வது திருமணம் செய்யவிருந்த லட்சுமணனை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது 3வது மனைவி அம்சவல்லியும் 4வது திருமணம் செய்வதற்காக வந்திருந்த கவியும் போலீசாரிடம் “புகார் ஏதும் வேண்டாம். நாங்கள் சமாதானமாக சென்றுவிடுகிறோம்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமணனை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News