டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. பணி நேரத்தை தாண்டி வேலை செய்ய நேரிடுவதால் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குவதாக கூறப்படுகிறது.