தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2540 பதவிகளுக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது

Advertisement

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 2540 பதவிக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய இத் தேர்வுக்கான முடிவை டிஎன்பிஎஸ்சி 57 வேலை நாட்களில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் 48 துறைகளில் 1820 பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் குரூப் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடந்தது.

இத்தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டும் எழுதினர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி கடந்த நவம்பர் 9ம் தேதி மேலும் உயர்த்தியது. அதாவது, 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2540 ஆக உயர்ந்தது. காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்த குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று மாலை தனது இணையதளத்தில் www.tnpsc.gov.in, tnpscresults.tn.go.inல் வெளியிட்டது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் முடிவுகள் 2022ம் ஆண்டை ஒப்பிடுகையில் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 2 முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News