தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டராம்பட்டு அருகே வனப்பகுதியில் நாய்கள் பயன்படுத்தி 7 உடும்புகளை வேட்டையாடிய 2 பேர் கைது

Advertisement

*வனத்துறையினர் அதிரடி

தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை பெண்ணையாறு காப்புக்காடு வேப்பூர்செக்கடி மேற்கு பீட் பகுதியில் நேற்று வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள மரத்தின் அருகே இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், இளையாங்கன்னி ஊராட்சியை சேர்ந்த மைக்கேல் அலெக்சாண்டர்(32), அலென்ஸ் வின்சென்ட்ராஜ்(24) என்பதும் அங்குள்ள உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட 7 உடும்புகள் மற்றும் பைக்கை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், வேட்டையாடுவதற்காக நாயை பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, நாய்களின் உரிமையாளர்கள் தங்கமணி(27), மற்றொரு தங்கமணியை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.தொடர்ந்து, இதுகுறித்து வேலூர் வன பாதுகாப்பு அலுவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கார்க் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அவர்களது உத்தரவின்படி இருவரையும் சாத்தனூர் வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரும் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News