இலங்கை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை
Advertisement
மேலும் படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததால், தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 17 மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Advertisement