Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இலங்கை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செப்.28ம் தேதி கடலுக்குச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும் படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததால், தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 17 மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.