100% தேர்ச்சி, 100% வேலை வாய்ப்பு போலி உத்தரவாதங்களை தடுக்க பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு நடவடிக்கை மீறுவோருக்கு அபராதம்
அதில், “பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் படிப்புகள் பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் அதன் காலவரையறை குறித்து தவறான உரிமை கோரல்களை வௌியிட கூடாது. பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களின் சான்றுகள், கட்டண முறைகள், பணத்தை திரும்ப பெறும் கொள்கைகள், தேர்வு விகிதங்கள், தேர்வு தரவரிசை, வேலை பாதுகாப்பு உத்தரவாதம், ஊதிய உத்தரவாதம் போன்றவை குறித்து தவறான அல்லது போலியான உத்தரவாதங்களை அளிக்க கூடாது. பொறுப்பு துறப்புகளை வெளியிட வேண்டும். தேர்வுக்கு பிறகு வெற்றி பெற்றவர்களின் உரிய எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வெற்றியாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், சான்றுகளை பயன்படுத்த கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ பயிற்சி மையங்கள் வேண்டுமென்றே தகவல்களை மாணவர்களிடம் இருந்து மறைக்கின்றன. இதை தடுக்கவே பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிகள் வௌியிடப்பட்டுள்ளன. இதை மீறுவோருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்தார்.