Saturday, June 14, 2025
Home செய்திகள் முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிதரக்கோரி நூதன போராட்டம்

முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிதரக்கோரி நூதன போராட்டம்

by Lakshmipathi

*மா.கம்யூ., சார்பில் நடைபெற்றது

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டிதரக்கோரி மா.கம்யூ,. சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு- உப்பூர் கிராமத்திற்கு இடையே கோரையாறு செல்கிறது. இந்த ஆறு கடைமடை பகுதியான இப்பகுதி வந்து கடலில் கலந்து சென்றாலும் இப்பகுதி விவசாய நிலையங்களுக்கு மிகப்பெரிய பாசனத்தை பெற்று தருகிறது, இந்தநிலையில் இந்த கோரையாறு இதன் தெற்கு பகுதியில் நான்கு சக்கரம் வாகனம் செல்லும் அளவில் வீரன்வயல் கிராமத்திற்கு செல்லும் சாலை ஒன்று உள்ளது. ஆனால் ஆற்றின் குறுக்கே மரத்தால் ஆனா நடைபாதை மட்டுமே இருந்தது.

இந்த சாலை வழியாக ஜாம்புவானோடை, தில்லைவிளாகம் உள்ளிட்ட வேதாரண்யம் உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கும் ரொம்ப ஈசியாக குறுக்கே செல்லும் ஒரு பாதை என்பதால் இதற்கு நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவில் பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் அரசு முன்வரவில்லை.

இதனையடுத்து இந்த ஆலங்காடு, வீரன்வயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார்12 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியில் முன்பு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருசக்கர வாகனம் செல்வதற்கும் நடந்து செல்வதற்கும் ஒரு சிறிய நடைபாலத்தை மட்டுமே அரசிடம் இருந்து பெற்று இருந்தனர்.

அந்த பாலம் போதிய தரமில்லாமல் கட்டப்பட்டதால் நாளடைவில் பழுது ஏற்பட்டது. இந்தநிலையில் இதன் காரணமாக கடந்த ஆண்டு பெய்து கன மழையின் காரணமாக அந்த பாலம் உடைந்து எந்தநேரத்திலும் விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் இதனை தயக்கத்துடன் ஆபத்தான நிலையில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் ஆலங்காடு, வீரன்வயல், செங்காடு தில்லைவிளாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் செல்வதற்கும், பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்வதற்கும் அவசர காலங்களில் பெரிய வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கும் ஏதுவாக நான்கு சக்கர வாகனம் செல்லும் வகையில் புதிய பெரிய பாலத்தை கட்டி தர வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படதால் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்நூதனப்போரட்டம் நடைபெறும் என அறிவித்தனர்அதன்படி நேற்று இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க ஒன்றிய செயலாளர்ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்பாலத்திற்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்அடித்தும் கிராம மக்களில் ஒருவரை பிணமாக நடிக்க வைத்து அவருக்கு கையில் மாவு கட்டு போட்டு மாலையிட்டு தப்பு மேளம் அடித்து, நெருப்பு சட்டி ஏந்தி நூதன முறையில் தங்களுடைய கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஆலங்காடு வீரன்வயல் இணைப்பு பாலமாக உள்ள அந்த உடைந்த பாலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஆலங்காடு பகுதிக்கு பேரணியாக வந்து நூதனப்போரட்டம் நடத்தினார்கள்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்ஆனாலும் தொடர்ச்சியாக ஊர்வலமாக வந்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர்முருகையன், மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர்ஜோதிபாசு, மாவட்ட குழு செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரமணி, காளிமுத்து, தேவகி, வீரசேகரன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi