Tuesday, May 13, 2025
Home செய்திகள்Showinpage புது காதலருடன் சமந்தா திருப்பதியில் சாமி தரிசனம்

புது காதலருடன் சமந்தா திருப்பதியில் சாமி தரிசனம்

by MuthuKumar

சென்னை: காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு சமந்தா வாழ்வில் மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அவரும் ஃபேமிலி மேன், சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப்தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமொருவும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ராஜ் நிடிமொருவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அதனால் அடுத்த பெண்ணின் கணவர் உங்களுக்கு வேண்டாம் சம்மு. அது பாவமாகிவிடும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ராஜும், சமந்தாவும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றிருக்கிறார்கள். சமந்தா சுடிதார் அணிந்தும், ராஜ் வேட்டி சட்டை அணிந்தும் சென்றிருந்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. நடிகையாக திரையுலகிற்கு வந்த சமந்தா ‘சுபம்’ எனும் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ராஜ், சமந்தாவுடன் ‘சுபம்’ படக்குழுவினரும் திருப்பதி கோவிலுக்கு சென்றார்கள். வெப்தொடர்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா பங்காரம் எனும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். சமந்தா தன் கெரியரில் பிசியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரின் காதல் வாழ்க்கை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ராஜும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என பேச்சு கிளம்பியபோது ஐதராபாத்தில் நடந்த பிக்கில் பால் போட்டியின்போது இருவரும் கை கோர்த்து நடந்து வந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi