கான்கெர்: சட்டீஸ்கரின் மோர்கண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குல்லே கட்லாமி(35), மனோஜ் கோவாசி(22) மற்றும் டக்கி கோவாசி (27). இவர்கள் நக்சல்கள் குறித்த ரகசிய தகவல்களை மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி போலீசாருக்கு பகிர்வதாக நக்சல்கள் சந்தேகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மூன்று பேரையும் நக்சல்கள் சுட்டுக்கொன்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவம்பர் 7ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கு ஒரு நாள் முன்னதாக நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.