புதுவை: புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. கல்லூரியில் சிசிடிவி கேமரா உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்து விட்டதாக கல்லூரி தரப்பில் இருந்து ஆணையத்துக்கு விளக்கம் அளித்துள்ளனர்.