நாகை: இந்தியாவின் நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே நாளை காலை பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. தொடக்க நாளை ஒட்டி நாளை ஒருநாள் மட்டும் கட்டணம் ரூ.3000 ஆக நிர்ணயம்; 35 பயணிகள் இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.