நாகை: இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம் நடத்தி வருகின்றனர். செருதூர், வெள்ளப்பள்ளம் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தம். அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர், செருதூர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 20 மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.