சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலுமணி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட் கூறியுள்ளது. 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதிமுக ஆட்சியின்போது சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.